அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா...
என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல.
எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள்.
-வாசி
பாலைவனச் சோலை கேள்விபட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன் ஆனால் மலை மேல் அதுவும் ஆண்டின் 10 மாதங்களுக்கு மேல் வரண்ட பகுதியாக இருக்கும் இந்த மலை மேல் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார்கள் ஓமன் நாட்டின் ஜபல் அக்ஃதர் என்னும் இடத்தில் . இங்கு மாதுளை பழம் பயிர் செய்கிறார்கள். இவ்விடத்திற்கு மழைக் காலம் முடிந்தவுடன் செல்ல வேண்டும் என சொல்கிறார் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர். இன்னொரு பார்க்க வேண்டிய இடம் 'வாடி குல்'(wadi ghul)இங்கு நீர் நிலை உள்ளது. இந் நீர் நிலையின் புகைப்படத்தை எங்களுக்கு ஓட்டல் உரிமையாளர் காட்டினார். புகைப்படம் நன்றாகத்தான் இருந்தது.இன்னொரு முறை செல்லவேண்டும் மழைக்காலம் முடிந்த உடன். இந்த இடம் NIZWA என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. அருகில் சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளது. ஜபல் அக்ஃதர் செல்ல விரும்புவோர்கள் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். ஓமன் நாட்டு காவல் துறையினர் இதை உறுதி செய்த பின்னரே மலை மேல் செல்ல அனுமதிக்கிறார்கள். மற்றொரு இடம் ஜபல் ஷம்ஸ் இங்கும் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். இது
Comments