இது நம் ஊர் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வேலை செய்யும் விதம். இந்த பணியாளர் ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல மாலையிட்டிருக்கிறார். செருப்பு அணியக்கூடாது என்பது ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் உண்டாக்கப்பட்டது. அந்த காலத்தில் சுமார் 15 மைல் கணக்கில் கால் நடைப்பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக செருப்பணியாமல் இருந்தார்கள். ஆனால் இது போன்ற தொழில் செய்பவர்கள் தங்கள் உயிர் மீது கவலைப்படுவதில்லையோ? அல்லது தொலைத்தொடர்பு அல்லாமல் மின்சுற்றாக இருந்தால் செருப்பணிவார்களா? இடுப்பில் உள்ள தற்காப்பு பட்டை எங்கே? ஒரு கயிறு கூட இல்லாமல் பணி புரியும் இவர்களை குறை சொல்வதா இல்லை இவர்களின் மேலிடத்தினரை குறை சொல்வதா? குறை கண்டறிவது எளிது யார் நடைமுறை படுத்துவார்கள்?