Skip to main content

Posts

கருப்பு-வெள்ளை

ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி
Recent posts

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தம்...

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி

ஓமன் நாட்டில் வரண்ட மலைமேல் சோலை

பாலைவனச் சோலை கேள்விபட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன் ஆனால் மலை மேல் அதுவும் ஆண்டின் 10 மாதங்களுக்கு மேல் வரண்ட பகுதியாக இருக்கும் இந்த மலை மேல் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார்கள் ஓமன் நாட்டின் ஜபல் அக்ஃதர் என்னும் இடத்தில் . இங்கு மாதுளை பழம் பயிர் செய்கிறார்கள். இவ்விடத்திற்கு மழைக் காலம் முடிந்தவுடன் செல்ல வேண்டும் என சொல்கிறார் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர். இன்னொரு பார்க்க வேண்டிய இடம் 'வாடி குல்'(wadi ghul)இங்கு நீர் நிலை உள்ளது. இந் நீர் நிலையின் புகைப்படத்தை எங்களுக்கு ஓட்டல் உரிமையாளர் காட்டினார். புகைப்படம் நன்றாகத்தான் இருந்தது.இன்னொரு முறை செல்லவேண்டும் மழைக்காலம் முடிந்த உடன். இந்த இடம் NIZWA என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. அருகில் சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளது. ஜபல் அக்ஃதர் செல்ல விரும்புவோர்கள் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். ஓமன் நாட்டு காவல் துறையினர் இதை உறுதி செய்த பின்னரே மலை மேல் செல்ல அனுமதிக்கிறார்கள். மற்றொரு இடம் ஜபல் ஷம்ஸ் இங்கும் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். இது

வானவேடிக்கை

துபாயில் ஆங்கில வருடப்பிறப்பன்று புர்ஜ் கலீஃபா எனப்படும் உலகத்தின் தற்போதய உயரமான கட்டிடத்தில் வானவேடிக்கை நடக்கும். இதுவரை வானவேடிக்கையை புகைப்படமெடுக்காததால் இம்முறை நடுங்கும் குளிரில் புகைப்படமெடுக்க முயற்சித்தேன் அவைகிளில் சில... மாறிக்கொண்டே இருக்கும் ஒளியின் அளவு மத்தியில் சரியாக எப்படி படமெடுப்பது என்பது இன்னும் சரியாக புரியவில்லை வாசி

துபாய் shopping festival

துபாய் shopping festival(shopping festival; விற்பனைத்திருவிழான்னே வைத்துக்கொள்ளலாம்) உலகத்தில் உள்ள மற்ற நாடுளின் வியாபாரிகள் வந்து கடை விரிக்க ஒரு இடம் திருவிழா நல்லாத்தான் இருக்கும். (இப்பொழுது முந்தைய வருடங்களில் இருந்தது போல இல்லைன்னாலும் வார இறுதியில் ஒரு முறை சென்று வரலாம்) இந்தியாவின் பகுதியில் நம் கேரளத்து கத களி உருவ பொம்மையின் முகம் மட்டும் வைத்திருந்தார்கள். இயன்ற அளவு பிற்சேர்க்கை செய்திருக்கிறேன். கருத்து தெரிவிக்க வேண்டியது காணபவர் கடமை

துபாயில் சிவராத்திரி கூட்டம்

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு என் நணபர் வீட்டுக்கு வருகிறேன் என்றார். 10 மணிக்கு சரியாக சரவணபவன் (பர் துபாய் -Bur Dubai) வாசலில் இருப்பதாக சொன்னார். அவரை அழைத்துவர தெருவிற்கு சென்றபோது நீ...ளமான வரிசை. என்னவென்று கேட்டால் சிவராத்திரி அதான் கோவிலுக்கு போகுற வரிசைன்னாங்க. கிட்டத்திட்ட 2 கி.மீ க்கும் மேல் இருந்தது வரிசை. நண்பர் நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்ததால் உடனே காமிராவை தூக்கிக்கொண்டு போய் படமெடுக்க இயலவில்லை. 2 மணி நேரம் கழித்து சென்று பார்த்தேன் அப்பவும் கூட்டமாகத்தான் இருந்தது. அந்த காட்சிகளை பதித்தது இங்கே... சாதாரணமாகவே வெள்ளிக்கிழமை என்றாலே கூட்டமாகத்தான் இருக்கும் பர் துபாய். இன்னைக்கு கேட்கவே வேண்டாம். சிவனை விட சிவன் மகனுக்கு (சரவண பவனுக்குத்தான்) கொண்டாட்டம் தான்.

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்