ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி
அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி