Skip to main content

துபாயில் சிவராத்திரி கூட்டம்

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு என் நணபர் வீட்டுக்கு வருகிறேன் என்றார். 10 மணிக்கு சரியாக சரவணபவன் (பர் துபாய் -Bur Dubai) வாசலில் இருப்பதாக சொன்னார். அவரை அழைத்துவர தெருவிற்கு சென்றபோது நீ...ளமான வரிசை. என்னவென்று கேட்டால் சிவராத்திரி அதான் கோவிலுக்கு போகுற வரிசைன்னாங்க. கிட்டத்திட்ட 2 கி.மீ க்கும் மேல் இருந்தது வரிசை. நண்பர் நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்ததால் உடனே காமிராவை தூக்கிக்கொண்டு போய் படமெடுக்க இயலவில்லை. 2 மணி நேரம் கழித்து சென்று பார்த்தேன் அப்பவும் கூட்டமாகத்தான் இருந்தது. அந்த காட்சிகளை பதித்தது இங்கே...







சாதாரணமாகவே வெள்ளிக்கிழமை என்றாலே கூட்டமாகத்தான் இருக்கும் பர் துபாய். இன்னைக்கு கேட்கவே வேண்டாம். சிவனை விட சிவன் மகனுக்கு (சரவண பவனுக்குத்தான்) கொண்டாட்டம் தான்.

Comments

Popular posts from this blog

ஓமன் நாட்டில் வரண்ட மலைமேல் சோலை

பாலைவனச் சோலை கேள்விபட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன் ஆனால் மலை மேல் அதுவும் ஆண்டின் 10 மாதங்களுக்கு மேல் வரண்ட பகுதியாக இருக்கும் இந்த மலை மேல் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார்கள் ஓமன் நாட்டின் ஜபல் அக்ஃதர் என்னும் இடத்தில் . இங்கு மாதுளை பழம் பயிர் செய்கிறார்கள். இவ்விடத்திற்கு மழைக் காலம் முடிந்தவுடன் செல்ல வேண்டும் என சொல்கிறார் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர். இன்னொரு பார்க்க வேண்டிய இடம் 'வாடி குல்'(wadi ghul)இங்கு நீர் நிலை உள்ளது. இந் நீர் நிலையின் புகைப்படத்தை எங்களுக்கு ஓட்டல் உரிமையாளர் காட்டினார். புகைப்படம் நன்றாகத்தான் இருந்தது.இன்னொரு முறை செல்லவேண்டும் மழைக்காலம் முடிந்த உடன். இந்த இடம் NIZWA என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. அருகில் சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளது. ஜபல் அக்ஃதர் செல்ல விரும்புவோர்கள் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். ஓமன் நாட்டு காவல் துறையினர் இதை உறுதி செய்த பின்னரே மலை மேல் செல்ல அனுமதிக்கிறார்கள். மற்றொரு இடம் ஜபல் ஷம்ஸ் இங்கும் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். இது