Skip to main content

PIT - அக்டோபர், படம் பட்ட பாடு

கீழே இருக்கிற 2 படங்களத்தாங்க ஒட்னது

படம் 1




படம் 2




முதல் படத்தில வண்டியோட மூஞ்சி சரியா தெரியிலையா, அதனால இரண்டாவது படத்த ஒட்ரா மாதிரி அயிடுச்சி. எதோ எனக்கு புரியிறா மாதிரி ஒட்னங்க அது நாட்டாமைக்கும் புடிச்சி போச்சி பாருங்க.

இரண்டாவது படத்தின் வண்டிக்கு மேலே உள்ள பாகம் எல்லாம் க்ராப் செய்து எடுத்து விட்டேன். அடுத்த லேயராக முதல் படத்தை சேர்த்தேன். இரண்டுக்கும் இடையில் ஒரு லேயர் மாஸ்க். இரண்டாவது படத்தில் வண்டியை முதல் படம் மறைத்து விட்டது (கொஞ்சமாக) அதனால் 2 வது படத்தின் வண்டி தெரியுமளவிற்கு பெயிண்ட் அடித்து, ( நன்றி PIT மற்றும் AN& ) முதல் படத்தில் இருக்கும் மணலை க்ளோன் செய்து (2 வது வண்டியின் இடப்பக்கம்), இழுத்து மறைச்சாச்சி. வலப்பக்கத்துக்கு 1-வது படத்தில் வலப்பக்கமுள்ள மண்ணை அப்படியே கீழ் பக்கம் க்ளோன் செய்து, இன்னொரு லேயரில் விளம்பரத்திற்கான வரிகள் சேர்த்து, கொஞ்சம் கலரிங்க். அவ்ளோ தான் ஜூட்.

லேயர் பத்தின விவரம் இங்கே

http://photography-in-tamil.blogspot.com/2008/10/blog-post.html

ஆனா இந்த படத்த போடலாமான்னு கடைசி வரைக்கும் கன்பூசனாவே இருந்திச்சிங்க




வாசி

Comments

செயல்முறையை பகிர்ந்துகிட்டது சந்தோஷம்!
இக்ளூ படமும் சுவையாத்தான் இருக்கு.
//About Me
வாசி
தேடுதல் என ஒன்று இருப்பதால்தான் வாழ்கை என ஒன்றிருக்கறது //

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்!!!

Popular posts from this blog

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்

கருப்பு-வெள்ளை

ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தம்...

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி