ஏதோ ஒரு வேலையாக துபாய் உலக வர்த்தக மையம் (Dubai World Trade Center) போக வேண்டி வந்தது. சரி புகைப்பட கருவியையும் கொண்டு போகலாமே என்ற எண்ணம் வரவே பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். இந்த மாதரி தண்ணீரில் நான் விளையாடியதில்லை. இந்த இரு சிறார்களை பார்த்த உடன் நான் குதித்த திருக்குளம் தான் ஞாபகம் வந்தது.(இதில் விளையாடும் சுகமே தனி)
சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்
Comments