ஆலயம் என்றால் அமைதி வேண்டும். 9 வயதில் இரவு 7-8 மணியளவில் கூண்டு வண்டி( மேற் கூறை மூடப்பட்ட மாட்டு வண்டி)யில் இரு புறமும் தென்னை மரம் சூழ்ந்த தார் போட்ட சாலையை கடந்து கப்பி ரோடு எனப்படும் கருங்கல் செம்மண் கலந்த சாலையில் கடக்கு முடக்கு சத்தத்துடன் வண்டி நகர்ந்தது. கொஞ்சம் தூரம் சென்றதும் கடக்கு முடக்கு மறைந்தது அத்துடன் ஒரு வித வித்தியாசமான வெளிச்சம் மெர்க்குரி வெளிச்சம் சூழ மெல்ல நகருகிறது வண்டி. இது தான் கோயிலு, இது தான் குளம் (அப்பா கன்னடத்தில் சொல்லுகிறார்)வண்டிக்கு பின் புறத்திலிருந்து 5 தலைகள் எட்டிப்பாரத்தது. வெளிச்சம் சரியாக இல்லை இருட்டாக உயரமாக உள்ள கட்டிடத்தின் மேலிருந்து வெளிச்சம் வருவது மட்டும் தெரிகிறது. காலேல பாத்தா நல்லா தெரியும் மறுபடியும் அப்பா. இந்த ஊரில்தான் இனிமேல் வாசம் என்பதறியாத மூன்று முகங்கள் வே என முழித்துக்கொண்டிருந்தன. அதற்குள் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றது வண்டி. வண்டி நின்றதும் அப்பா பின் புறம் வந்து குறுக்குக் கம்பியை எடுத்து எல்லாம் இறங்குங்க என்றார். அதற்குள் வாங்க வாங்க என சில முகங்கள், இது வரை காணாதவை ! தயக்கத்துடன் சென்றோம் சித்தப்பாவின் வீட்டிற்குள். வாழ்கையின் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பித்தது.
மறு நாள் காலையில் கண்ட காட்சிதான் இது (பல வருடங்கள் கடந்து எடுத்த புகைப்படம்)

கண்ணபுரம் என்றதும் நினைவிற்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாட்டு
மறு நாள் காலையில் கண்ட காட்சிதான் இது (பல வருடங்கள் கடந்து எடுத்த புகைப்படம்)
கண்ணபுரம் என்றதும் நினைவிற்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாட்டு
Comments