Skip to main content

கண்ணபுரம்

ஆலயம் என்றால் அமைதி வேண்டும். 9 வயதில் இரவு 7-8 மணியளவில் கூண்டு வண்டி( மேற் கூறை மூடப்பட்ட மாட்டு வண்டி)யில் இரு புறமும் தென்னை மரம் சூழ்ந்த தார் போட்ட சாலையை கடந்து கப்பி ரோடு எனப்படும் கருங்கல் செம்மண் கலந்த சாலையில் கடக்கு முடக்கு சத்தத்துடன் வண்டி நகர்ந்தது. கொஞ்சம் தூரம் சென்றதும் கடக்கு முடக்கு மறைந்தது அத்துடன் ஒரு வித வித்தியாசமான வெளிச்சம் மெர்க்குரி வெளிச்சம் சூழ மெல்ல நகருகிறது வண்டி. இது தான் கோயிலு, இது தான் குளம் (அப்பா கன்னடத்தில் சொல்லுகிறார்)வண்டிக்கு பின் புறத்திலிருந்து 5 தலைகள் எட்டிப்பாரத்தது. வெளிச்சம் சரியாக இல்லை இருட்டாக உயரமாக உள்ள கட்டிடத்தின் மேலிருந்து வெளிச்சம் வருவது மட்டும் தெரிகிறது. காலேல பாத்தா நல்லா தெரியும் மறுபடியும் அப்பா. இந்த ஊரில்தான் இனிமேல் வாசம் என்பதறியாத மூன்று முகங்கள் வே என முழித்துக்கொண்டிருந்தன. அதற்குள் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றது வண்டி. வண்டி நின்றதும் அப்பா பின் புறம் வந்து குறுக்குக் கம்பியை எடுத்து எல்லாம் இறங்குங்க என்றார். அதற்குள் வாங்க வாங்க என சில முகங்கள், இது வரை காணாதவை ! தயக்கத்துடன் சென்றோம் சித்தப்பாவின் வீட்டிற்குள். வாழ்கையின் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பித்தது.
மறு நாள் காலையில் கண்ட காட்சிதான் இது (பல வருடங்கள் கடந்து எடுத்த புகைப்படம்)


கண்ணபுரம் என்றதும் நினைவிற்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாட்டு

Comments

Popular posts from this blog

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்

கருப்பு-வெள்ளை

ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தம்...

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி